விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வில் எளிமையாக வெற்றி பெற உதவும் வகையில் வினா-விடை கையேடுகளை சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா தனது சொந்த செலவில் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையான தரமான கல்வியை வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கணினி வகுப்பறைகள், போட்டித் தேர்வுகளுக்கான தயார் கையேடுகள் உள்ளிட்டவை அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக, விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட 21 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்விற்கு உதவும் வகையில் தமிழ், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய பாடங்களுக்கான வினா-விடை கையேடுகளை சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா தன்னுடைய சொந்த செலவில் வழங்கி உள்ளார்.
நேற்று மாலை, பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாணவ, மாணவிகளுக்கு கையேடுகளை வழங்கிய அவர், “நானும் அரசு பள்ளியில் படித்தவனாக இருக்கிறேன். விவசாய குடும்பத்தில் பிறந்து, இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு ஆனேன். இன்று தமிழக அரசு மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் இந்த கையேடுகளை பயன்படுத்தி கல்வியில் முன்னேறி, 100% தேர்ச்சி பெற வேண்டும்” என அறிவுறுத்தினார். மேலும், “எந்தவித கல்வி உதவியாக இருந்தாலும் என்னை தொடர்புகொண்டு கேட்கலாம்” எனவும் மாணவர்களுக்கு உறுதிமொழி வழங்கினார்.
தொகுதி முழுவதும் 21 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 3,000 மாணவர்களுக்கு இந்த கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் ஐஐடி, மருத்துவம் போன்ற உயர்கல்வியை எளிதாக பெற வேண்டும் என்பதே தனது நோக்கம் என அன்னியூர் சிவா தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம்
தனியார் பள்ளிகளை மிஞ்ச அரசுப் பள்ளி கல்வி! விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவாவின் மாணவர் நலப் பரிசு!
தனியார் பள்ளிகளை மிஞ்ச அரசுப் பள்ளி கல்வி! விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவாவின் மாணவர் நலப் பரிசு!
- February 5, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this