சென்னை

செஸ் உலகை அதிரவைத்த தமிழன்! டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 சாம்பியன் பிரக்ஞானந்தா சென்னை திரும்பினார்!

நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2025 செஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் மற்றொரு தமிழக வீரர் குகேஷை எதிர்த்து விளையாடிய அவர், கடுமையான போட்டிக்குப் பிறகு டை பிரேக்கில் வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம், பிரக்ஞானந்தா உலக அளவில் தன் திறனை மேலும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்கத்தில் சுணக்கங்கள் இருந்தாலும், இறுதியில் தனது மூன்று முக்கியமான போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முன்னேறி இறுதியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பிரக்ஞானந்தா சென்னை திரும்பியதையடுத்து, விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் மற்றும் செஸ் அணி உறவினர்கள் அவரை பாராட்டினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரக்ஞானந்தா, “இந்த வெற்றி எனக்கு மிக முக்கியமான ஒன்று. இந்த போட்டிக்காக சிறப்பான முறையில் தயாராகியிருந்தேன். மிகப்பெரிய போட்டியாக இருந்ததால் கடுமையான சவால்கள் இருந்தன. குறிப்பாக, முடிவெடுப்பதற்கான நேரம் குறைவாக இருந்தது. ஆனால், போட்டியில் மனச்சோர்வின்றி ஆடியதால், எனது திறமை வெளிப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே எனக்கு ஒரு பெரிய வெற்றி கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,” என்று கூறினார்.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image