கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது எல்லை தாண்டியதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இது மீனவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படை, தெற்கு மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக கூறி, ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை கைது செய்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைதான மீனவர்களை இலங்கையின் மன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்று, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற மீனவர் கைது சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால், மீனவர்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலை எழுந்துள்ளது. இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
மீனவர்களை உடனடியாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த தொடர்ச்சியான இலங்கை கடற்படை நடவடிக்கைகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம்
“கச்சத்தீவுக்குள் மீனவர்கள் மீட்பு பரபரப்பு – இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம்!”
“கச்சத்தீவுக்குள் மீனவர்கள் மீட்பு பரபரப்பு – இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம்!”
- February 3, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this