மதுரையில் பேருந்திற்காக காத்திருந்த காவலர் மீது கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். சொந்த ஊருக்கு செல்வதற்காக மதுரைக்கு வந்த ராஜ்குமார், மண்டேலா நகர் சந்திப்பு பகுதியில் காரியாபட்டி பேருந்திற்காக காத்திருந்தார்.அப்போது, மதுரை சோளங்குரணி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் தனது காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு வெளியே வந்தார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், திடீரென முற்றியது. இதன் பின்னர் ஆறுமுகம் தன் கையில் இருந்த கத்தியால் ராஜ்குமாரை குத்தியுள்ளார்.
காயமடைந்த காவலர் அங்கேயே மயங்கி விழுந்தார் பின்பு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், ஆறுமுகத்தை உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave feedback about this