பழனியில் குட்கா பான் மசாலா வடமாநில தொழிலாளர்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனை- உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் வட மாநில பெண்கள் வாக்குவதம் செய்ததால் பரபரப்பு.
பழனி அருகில் உள்ள சிவகிரிபட்டி ஊராட்சியில் சாலை ஓரத்தில் தற்காலிக குடிசைகளை அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். பழனி மலையடிவாரத்தில் மேளம் தாளம், பூங்கொத்துகள், செல்போன் கவர்கள் ,சாமி சிலைகளை தயாரித்து வியாபாரம் செய்கின்றனர்.
வட மாநில தொழிலாளர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலாவை உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணன் என்பவருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சோதனை செய்வதற்காக சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணனை வட மாநில தொழிலாளர்கள் சூழ்ந்துகொண்டு வாக்கு வாதம் செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சுப்பையா ,ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வட மாநில தொழிலாளர்களிடமிருந்து 3 கிலோ அளவிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து வட மாநிலத்தில் நடைபெறும் போலீசார் சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave feedback about this