ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்தி:
சினிமா உலகில் விவாகரத்து மற்றும் தனித்துவ வாழ்வு குறித்து பரவுகின்ற வதந்திகள் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில், ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இடையிலான விவாகரத்து குறித்த செய்திகள் அதிகரித்து வந்துள்ளன. இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் தன்னுடைய குடும்ப பெயரை ‘பச்சன்’ நீக்கி, துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெறும் “ஐஸ்வர்யா ராய்” என அழைக்கப்பட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனால், இருவரின் விவாகரத்து செய்தி உண்மையாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.
ஐஸ்வர்யா ராய், உலக அழகி பட்டம் வென்ற பின்னர் சல்மான் கான் மற்றும் விவேக் ஓபராய் உடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார். பின்னர் 2007-இல், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து, நடிப்பில் இருந்து விலகினார். தற்போது அவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார்.
ஆனால், சமீபகாலமாக, ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இடையிலான விவாகரத்து பற்றிய தகவல்கள் பரவி வருகின்றன. சில ஊடகங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதையும், தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளன.
Leave feedback about this