விழுப்புரம் மாவட்டத்தின் 23வது புதிய மாவட்ட ஆட்சியராக ஷேக் அப்துல் ரகுமான் இன்று பொறுப்பேற்று கொண்டார். இதற்கு முன்பு ஆவடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய அவர், தற்போது பழனி இந்து சமய அறநிலைத்துறைக்கு மாற்றப்பட்ட பழைய ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
பொறுப்பேற்றவுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசுக்கு நன்றி தெரிவித்து பேசினார். மேலும், விழுப்புரம் மாவட்ட மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார். விழுப்புரம் மாவட்டம் ஒரு விவசாயம் சார்ந்த பகுதி என்பதால், விவசாய வளர்ச்சி மற்றும் சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
அரசு அறிவித்துள்ள அனைத்து நலத்திட்டங்களையும், மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, விரைவாக மக்களுக்கு பயனளிக்க செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், மக்கள் எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து மாவட்ட ஆட்சியரை சந்திக்கலாம் என்பதற்கான சூழலை உருவாக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார். மனை பட்டா வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை தகுதியான அனைவருக்கும் உரிய முறையில் செயல்படுத்துவோம் என்றும் உறுதியளித்தார்.

விழுப்புரம் மாவட்டம்
“விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஷேக் அப்துல் ரகுமான் – மக்களுக்காக 24×7 செயல்படுவோம்!”
“விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஷேக் அப்துல் ரகுமான் – மக்களுக்காக 24×7 செயல்படுவோம்!”
- February 5, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this