விருதுநகர் மாவட்டம்

“2000 ஆண்டுகள் பழமையான பெண்களின் விளையாட்டு சான்றுகள் – விஜயகரிசல்குளம் அகழாய்வில் அதிரடி கண்டுபிடிப்பு!”

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் பல்வேறு முக்கியமான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த அகழாய்வின் மூலம் பண்டைய மக்களின் வாழ்வியல், கலாச்சாரம், பொழுதுபோக்கு, விளையாட்டு முறைகள் பற்றிய புதிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வருகிறது.

இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதில், சங்கு வளையல்கள், சுடுமண் முத்திரைகள், மண் குவளைகள், கண்ணாடி மணிகள், சூது பவளம், தீப விளக்குகள், ஆபரணங்கள் போன்ற பல்வேறு தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, பெண்கள் பாண்டி விளையாட்டில் பயன்படுத்திய வட்டச்சில்லுகள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முன்பு நடந்த இரண்டு கட்ட அகழாய்வுகளில் குழந்தைகள் விளையாட பயன்படுத்திய சில்லுவட்டுகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் தற்போது பெண்களும் பொழுதுபோக்கிற்காக விளையாட்டுகளை அனுபவித்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

கலையாட்டங்களில் முக்கியமாக சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆட்டகாய்கள், தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டகாய்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 3,200 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குநர் பொன் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்த அகழாய்வு பண்டைய மக்களின் பொழுதுபோக்கு முறைகள், கலாச்சாரம், மற்றும் சமூக வாழ்க்கையின் தனித்துவங்களை விளக்குவதால், தொல்லியல் ஆராய்ச்சியில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image