தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி கொடுப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகனுக்கு சொந்தம் என்பதை உறுதிப்படுத்தி புனிதம் காக்க கோரி நேற்று திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டம் நடைபெற்றபோது, 144 தடை உத்தரவை மீறி கோவிலில் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவிக்கையில், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் கலவரத்தை தூண்ட முடியுமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது. இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழும் மாநிலம் தமிழ்நாடு. இதை பெரிய விவகாரமாக்கி அதில் லாபம் அடைய சிலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால், கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை நிச்சயம் ஒடுக்குவோம்,” எனக் கூறினார்.
மேலும், ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அதைபோல 2026 சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார். “இது தொடர்பாக எந்தவிதமான சந்தேகமும் இல்லை. தமிழ்நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை காக்க அரசு உறுதியாக செயல்படும்,” என அவர் குறிப்பிட்டார்.

திருப்பரங்குன்றம்
“தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம்!” – அமைச்சர் ரகுபதி உறுதியான எச்சரிக்கை!
“தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம்!” – அமைச்சர் ரகுபதி உறுதியான எச்சரிக்கை!
- February 5, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this