ராமநாதபுரம் மாவட்டம்

இலங்கை நீதிமன்றம் அதிரடி: 19 தமிழக மீனவர்கள் விடுதலை – 3 பேருக்கு தலா ₹60.5 லட்சம் அபராதம்!

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மூவருக்கு தலா ₹60.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நீதிமன்றம் இந்த முடிவை அறிவித்துள்ளதோடு, அபராதம் செலுத்தத் தவறினால் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம் பகுதியில் இருந்து கடந்த ஜனவரி 26ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 34 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசையும், மத்திய அரசையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் முயற்சிகளால், இன்று 19 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட்ட 19 மீனவர்களில் 16 பேருக்கு தலா ₹50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் படகு ஓட்டிய மூவருக்கு தலா ₹60.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், 16 மீனவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை, மூவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதே நேரத்தில் மீதமுள்ள 15 மீனவர்களின் படகுத் தரவுகள் தவறாக பதிவாகியதால், அவர்களின் விடுதலை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதனால், அவர்களின் வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக இலங்கை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த 19 மீனவர்களை தமிழகத்துக்கு திரும்ப அனுப்பும் பணிகளை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். மீதமுள்ள மீனவர்களின் விடுதலைக்காக தமிழக அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image