தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. காலநிலை மாற்றத்தால் உலகளவில் மிகப்பெரிய பிரச்சனைகள் உருவாகி வரும் நிலையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் மூன்றாவது உச்சி மாநாடு இன்று சென்னையில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். மாநாட்டின் முக்கிய பகுதிகளில், காலநிலை மாற்றத்திற்கான மாநில அரசின் முன்னெடுப்புகள், பசுமை தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான புதிய திட்டங்கள், நவீன தீர்வுகள் ஆகியவை அடங்கும். இதனுடன், சுற்றுச்சூழல் துறையில் சிறந்த சாதனைகள் புரிந்த நிறுவனங்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
மாநாட்டின் முக்கிய அம்சமாக, கழிவுகளை மறுசுழற்சி செய்யும் புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படுகிறது. தொழில்துறை நிறுவனங்களின் பசுமைச் செயல்பாடுகளுக்காக “பசுமை குறியீடு” வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. மாநாட்டின் மூலம், தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கேற்ப அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை
தமிழ்நாட்டின் எதிர்கால பசுமை திட்டம்! – காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டின் எதிர்கால பசுமை திட்டம்! – காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
- February 4, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this