தமிழகம்

“தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்கள் – பிப்.24ல் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!”

தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்கள் பிப்ரவரி 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளன.

சென்னையில் மட்டும் 33 இடங்களில் இந்த மருந்தகங்கள் செயல்படவிருக்கின்றன. இதுவரை 840 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன, மேலும் மற்ற விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஜெனரிக் மருந்துகள் மற்றும் பிற அவசியமான மருந்துகள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க இந்த முதல்வர் மருந்தக திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த திட்டத்திற்காக, B.Pharm அல்லது D.Pharm சான்றிதழ் பெற்றவர்கள், அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள், www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

கடந்த சில வாரங்களாகவே, முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்தன. தற்போது, இதன் முதல் கட்டமாக 1,000 மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன.

இந்த திட்டம் மூலம், மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்கச் செய்வதுடன், மருந்தக உரிமையாளர்களுக்கு அரசு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image