சென்னை

“திடீர் முடிவு! ராகுல் காந்தி இன்று மாலை சென்னையில் – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!”


காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று திடீரென சென்னைக்கு வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு சென்னை மாநகரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ராகுல் காந்தி இன்று ஆந்திராவில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். அந்த நிகழ்ச்சியை முடித்தவுடன், அவர் நேரடியாக டெல்லிக்கு திரும்பவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவரது பயணத்திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அவர் திடீரென சென்னை வர முடிவு செய்துள்ளார்.

இன்றைய பயணத்தில், ராகுல் காந்தி ஆந்திராவிலிருந்து ரயிலில் சென்னைக்கு பயணிக்கிறார். பின்னர், சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட உள்ளார். அவரது வருகை குறுகிய நேரத்திற்கே இருந்தாலும், அவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு, சென்னை ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அவரை வரவேற்க காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தயார் நிலையில் உள்ளனர்.

சென்னை காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.

ராகுல் காந்தியின் இந்த திடீர் வருகை எந்த முக்கிய காரணத்திற்காக என்கிற விஷயம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிவராத நிலையில், அவரது வருகை தமிழக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image