ராமநாதபுரம் மாவட்டம்

பாம்பன் புதிய பாலம் திறப்பு விழா – தமிழகம் வரும் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும் ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடல் பகுதியில் 2.2 கிலோமீட்டர் நீளத்துடன் ரயில் பாலம் 1914ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது இந்தியாவின் முதல் கடல்மீது அமைக்கப்பட்ட ரயில் பாலமாகும்.

கடந்த 106 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த இந்த பாலம் பழுதடைந்ததால், புதிய பாலம் கட்டும் திட்டம் ரூ.550 கோடி செலவில் 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது அந்த பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்காக பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை, இந்த பாலத்தில் பயணிகள் இல்லாத நிலையில் 60 கிமீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. மேலும், பாலத்தின் நடுவில் உள்ள செங்குத்து இரும்பு கர்டர் மேலே தூக்கப்பட்டு, இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கப்பலை அதன் வழியாக இயக்கும் சோதனையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவில் பங்கேற்று, அதை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். இதில் பல முக்கிய அதிகாரிகள் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். ரூ.15,000 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image