தமிழகம்

“நாம் தமிழர் கட்சியில் பிளவு? மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அதிரடி விலகல்!”

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜெகதீச பாண்டியன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், கட்சி தனது தத்துவத்திலிருந்து விலகி, ஒரு தனிப்பட்ட நபரின் சுயநலத்திற்காக செயல்படும் அமைப்பாக மாறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழுக்கும் தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது என தெரிவித்த அவர், கட்சியின் அடிப்படை நோக்கங்கள் வழிமாறப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் ஒழுக்கமுள்ள தலைமை இல்லாவிட்டால், அமைப்பு வெறும் அரசியல் நாடகமே ஆகிவிடும் என அவர் விமர்சித்துள்ளார்.

அவரது அறிக்கையில், சீமான் மீது கடுமையான குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். “முழு சங்கி போல செயல்படுகிறார். தமிழ் தேசியத்திற்கும், தனிப்பட்ட அரசியல் லாபத்திற்கும் இடையே கட்சியில் பரிதாபமான பிளவு ஏற்பட்டுள்ளது. சீமானின் அணுகுமுறையால் கட்சியின் அடிப்படை நோக்கம் வழிதவறி வருகிறது” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெகதீச பாண்டியன், கட்சியின் முக்கிய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தவர். கட்சியின் முக்கிய முடிவுகளில் முக்கிய பங்கு வகித்திருந்த அவர், கட்சியின் தற்போதைய செயல்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களால் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது விலகல் கட்சிக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவரின் எதிர்கால அரசியல் திட்டம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. புதிய கட்சியை தொடங்குவாரா, அல்லது வேறு எந்த ஒரு கட்சியில் இணைவாரா என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.

நாம் தமிழர் கட்சியில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் குழப்பநிலையை இது மேலும் தீவிரப்படுத்தும் என கருதப்படுகிறது. கட்சியின் தற்போதைய தலைமை இந்த விலகலுக்கு எப்படி பதிலளிக்கும் என்பது முக்கியமானதாக உள்ளது.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image