அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச உள்ளார். கடந்த மாதம் 20ம் தேதி டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கியமான பேச்சுவார்த்தையை நடத்தினார். இதுகுறித்து, டொனால்டு டிரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, “அமெரிக்கா-இந்தியா இடையேயான நல்லுறவு தொடரும். பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வருவார்” என்று தெரிவித்தார்.
இந்த சூழலில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிப்ரவரி 10, 11ம் தேதிகளில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். அங்கிருந்து பிப்ரவரி 12ம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்லவுள்ளார். பிப்ரவரி 13ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து, இருநாடுகளின் உறவுகள், பொருளாதார ஒத்துழைப்புகள் உள்ளிட்ட விவகாரங்களைப் பற்றி விவாதிக்க உள்ளார். இந்த சந்திப்பு சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றிரவு டொனால்டு டிரம்ப் சார்பில் பிரதமர் மோடிக்காக சிறப்பு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்து, பிப்ரவரி 14ம் தேதி அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இதன் மூலம் இருநாடுகளுக்குமிடையே தொழில் மற்றும் முதலீடு தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்றபோது, அவரது பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இருவரும் சந்திக்க உள்ளதை பல்வேறு அரசியல் வட்டாரங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றன.

இந்தியா
“அமெரிக்க தொழிலதிபர்களை சந்திக்க உள்ள மோடி – முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா?”
“அமெரிக்க தொழிலதிபர்களை சந்திக்க உள்ள மோடி – முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா?”
- February 4, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this