இந்தியா

“மணிப்பூரில் பதற்றம் முடிவுக்கு வருமா? – குடியரசு தலைவர் ஆட்சி அமல்!”

மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 13 (வியாழக்கிழமை) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மணிப்பூர் மாநில முதலமைச்சராக இருந்த என். பிரேன் சிங், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அங்கு புதிய முதல்வரை நியமிக்கும் முன் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மணிப்பூரில் இன ரீதியான கலவரங்கள் நீண்ட காலமாக தொடர்ந்துவரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கிடையே, பாஜகவைச் சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள், பிரேன் சிங்கை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை வைத்தனர்.
மணிப்பூர் சட்டமன்ற சபாநாயகர் சத்யபிரதா சிங், அமைச்சர்கள் தொங்கம் பிஸ்வஜித் சிங், யும்னம் கெம் சந்த் சிங் உள்ளிட்ட பல பாஜக உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, டெல்லிக்கு சென்ற பிரேன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, மணிப்பூர் சென்றடைந்த அவர், சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்று, மணிப்பூர் மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இந்நிலையில், புதிய முதலமைச்சர் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மத்திய அரசு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியுள்ளது.

இந்த முடிவு, மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் அமைதியின்மையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும், அரசியல் நிலையை உறுதிப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image