அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு எஃப்-35 ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனையின் பின்னர், இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, இந்த ஆண்டிலிருந்து இந்தியாவுக்கு அதிகளவிலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்ய உள்ளோம். அதன்பகுதியாக, இந்தியாவுக்கு எஃப்-35 ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்குவோம் என்று டிரம்ப் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் எரிவாயு பாதுகாப்பை உறுதி செய்ய, எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும், 2030ம் ஆண்டுக்குள் இரு நாடுகளின் வர்த்தக பரிவர்த்தனை 500 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.
அதிநவீன தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட எஃப்-35 போர் விமானங்கள், துல்லியமான தாக்குதல் திறன், நீண்ட தூரத்தில் மிரட்டல்களை அடையாளம் காணும் வசதி மற்றும் ஸ்டெல்த் (கண்ணிற்கு தெரியாத) செயல்பாடு போன்ற சிறப்பம்சங்களுடன், உலகின் மிக சக்திவாய்ந்த போர் விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்தியாவின் சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் தொடரும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்புத் தரத்தை மேலும் உயர்த்தும் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா – அமெரிக்க இராணுவ ஒத்துழைப்புக்கு ஒரு புதிய பரிமாணம் சேர்க்கப்படும் என்று இரு நாடுகளின் பாதுகாப்பு வல்லுநர்களும் மதிப்பீடு செய்து வருகின்றனர். மேலும், இந்தியாவின் பாதுகாப்பு போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம்
“இந்தியாவுக்கு அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 போர் விமானங்கள் – டிரம்ப்பின் பெரிய அறிவிப்பு!”
“இந்தியாவுக்கு அமெரிக்காவின் அதிநவீன எஃப்-35 போர் விமானங்கள் – டிரம்ப்பின் பெரிய அறிவிப்பு!”
- February 14, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this