உலகம்

அமெரிக்கா-இந்தியா ஆயுத ஒப்பந்தம்: டிரம்ப் அதிரடி அழுத்தம், புதிய எச்சரிக்கை!

இந்தியாவை அதிகளவில் ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நெருக்கடி தருவதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் விமானங்கள், போர் வாகனங்கள், ஏவுகணைகள் மற்றும் ஏரோ-என்ஜின்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை இந்தியா வாங்க வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறது.

இந்தியாவும் அமெரிக்காவும் ஆண்டு தோறும் $25 பில்லியனுக்கும் அதிகமான வர்த்தகத்தை மேற்கொள்கின்றன. சமீபத்தில் இந்தியா, அமெரிக்க அரசாங்கத்துடன் $3.3 பில்லியன் மதிப்பிலான 31 MQ-9B ‘பிரிடேட்டர்’ ரிமோட் பைலட் விமானங்களுக்கான ஒப்பந்தத்தையும், அதனைத் தொடர்ந்து $520 மில்லியன் மதிப்பிலான ட்ரோன் ஒப்பந்தத்தையும் மேற்கொண்டது. இதன் பின்னணியில், கூடுதல் ராணுவ பொருட்களை இந்தியா வாங்க இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற சில உயர் தரப் பொருட்களுக்கான வரிகளை இந்தியா குறைக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் உள்நாட்டு தொழில்களில் பெரிய தாக்கம் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்கு வரி மூலமாக அழுத்தம் கொடுக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் அதிக வரி விதிக்கும் நாடுகளாக இருப்பதாகவும், இதனால் எதிர்காலத்தில் அமெரிக்கா இந்த நாடுகளுக்கு எதிராக கடுமையான வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் வர்த்தக நடவடிக்கைகள், அமெரிக்கா-இந்தியா உறவின்மீது கொண்டுவரும் தாக்கத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image