2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடர்களை இந்தியாவில் நடத்த முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட்டால், நாட்டு விளையாட்டு துறையில் முக்கிய வளர்ச்சி ஏற்படும் என்று அவர் கூறினார். இதனுடன், நாட்டின் சுற்றுலா துறையும் உயர்வடையும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 100க்கும் அதிகமான இந்திய வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா ஒரு தங்கம், 5 வெண்கலம் உட்பட 6 பதக்கங்களை கைப்பற்றியது. இதுவரை இல்லாத அளவிற்கு பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் கிட்டத்தட்ட பதக்கங்களை வெல்லும் நிலையை எட்டியிருந்தனர். இருந்தாலும், இது இந்தியாவிற்கு சிறந்த ஒலிம்பிக் தொடராக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினர் நீடா அம்பானி, 2036 ஒலிம்பிக்கிற்கு இந்தியா முன்னேறி இருக்கும் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதன் பின்னர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம், இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநில டேராடூனில் 38வது தேசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடத்தப்பட்டாலும், அங்கு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படும்.
விளையாட்டு வீரர்களுக்கு புதிய வசதிகள் உருவாகும்.
ஒலிம்பிக் என்பது வெறும் விளையாட்டு நிகழ்வு அல்ல. அது கட்டுமானம், போக்குவரத்து, சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
உலகம் முழுவதும் இருந்து ரசிகர்களும், விளையாட்டு வீரர்களும் இந்தியாவிற்கு வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
அண்மையில் இந்தியாவின் கோகோ அணி தங்கம் வென்றது. உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் குகேஷ் சாம்பியனாக எழுந்தார்.
இந்தியாவில் விளையாட்டு என்பது வெறும் கூடுதல் திறமையாக இல்லை. இளைஞர்கள் அதை தங்களது எதிர்காலமாக மாற்றி வருகின்றனர் என்று பிரதமர் மோடி கூறினார்.
Leave feedback about this