உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் போது, ஆளுநர் தரப்புக்கு நீதிபதிகள் பல்வேறு கடுமையான கேள்விகளை எழுப்பினர்.
தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 12 மசோதாக்களில், இரண்டு மசோதாக்கள் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதாகவும், மீதமுள்ள 10 மசோதாக்கள் ஆளுநரிடம் கிடப்பிலேயே உள்ளதாகவும், தமிழக அரசு தெரிவித்துள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தும் ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது எனக்கூறி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவின் விசாரணை நடைபெற்று வருகிறது.
நீதிபதிகள், “ஆளுநர் எதுவும் விளக்கமளிக்காமல் மசோதாவை திரும்ப அனுப்பினால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது எப்படி தெரியும்?”, “மசோதா மீது ஒப்புதல் அளிக்க முடியாது என்று எதன் அடிப்படையில் முடிவு செய்தார்?”, “மசோதாவில் மாற்றம் செய்ய வேண்டிய காரணங்களை ஆளுநர் தெரிவிக்கவில்லை என்றால், அரசுக்கு எப்படி தெரியும்?” என தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பினர்.
ஆளுநர் தரப்பில், “தமிழ்நாடு அரசு கொண்டு வந்த துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட மசோதாக்கள் மத்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. எனவே, அவற்றுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க முடியாது”, “மசோதா அரசியல் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளது”, “ஆளுநர் மசோதா குறித்து முடிவெடுக்கலாம், ஆனால் ஒப்புதல் வழங்காமல் இருக்கலாம்” என பதிலளிக்கப்பட்டது.
இதற்கிடையில், நீதிபதிகள், “குடியரசுத் தலைவர் மசோதா மீது முடிவெடுக்காமல் இருந்தால், அடுத்து என்ன?”, “மசோதா நீண்ட காலம் கிடப்பிலேயே இருந்து விடுமா?”, “இரண்டு ஆண்டுகளாக மசோதாக்கள் குடியரசுத் தலைவரிடம் உள்ளதா?” என தொடர்ந்து கேள்விகள் எழுப்பினர்.
ஆளுநர் தரப்பில், “மசோதாக்கள் அனுப்பப்பட்ட 2 மாதங்களில் குடியரசுத் தலைவர் தனது முடிவை தெரிவித்து விட்டார். அதில் 7 மசோதாக்கள் மீது ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக தெரிவித்திருக்கிறார்” என்று அட்டர்னி ஜெனரல் விளக்கமளித்தார்.
இந்த வழக்கு தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான அதிகாரப் போட்டியில் முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்ற தீர்ப்பின் மூலம், ஆளுநரின் அதிகார வரம்பு குறித்து முக்கிய விளக்கம் வெளியாக வாய்ப்பு உள்ளது.

இந்தியா
“ஆளுநர் முட்டுக்கட்டாக இருக்க முடியாது” – உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்புக்கு கடும் கேள்விகள்!
“ஆளுநர் முட்டுக்கட்டாக இருக்க முடியாது” – உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்புக்கு கடும் கேள்விகள்!
- February 7, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this