ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிலைமை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. பொதுவாக, இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் என்று கருதப்பட்டாலும், நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தலில் முன்னேற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததிலிருந்து, அந்தக் கட்சி எதிர்ப்புக்கு உள்ளாகியிருப்பதாக திராவிட இயக்க ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். தமிழகத்தில் பெரியாரின் தாக்கம் மிக அதிகமானது. அதிலும், அவரது சொந்த ஊராக இருக்கும் ஈரோடு பகுதியில் சீமான் கட்சிக்கான எதிர்ப்பு அதிகரித்திருக்கும் என்று கூறப்படுகிறது.
சீமான் பெரியாரை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புத் தோன்றியது. அந்த நிலையில், பெரியாரின் மண்ணான ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது, அந்த எதிர்ப்பை மேலும் தூண்டியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்காக சீமான் ஈரோடு வந்தபோது, அவருக்கு எதிராக பலர் குரல் எழுப்பினர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியிடமும், “உங்கள் தலைவர் பெரியாரை இழிவாக பேசிவிட்டு, இங்கே வந்து வாக்கு கேட்பது முறையா?” என மக்கள் கேள்வி எழுப்பினர். இதனால், அந்த கட்சிக்கு வாக்கு சரிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு நடைபெறும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி முன்னேற்றம் காணுமா, இல்லை வீழ்ச்சியா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கடந்த சட்டசபைத் தேர்தல்களில் அந்தக் கட்சி ஈரோடு தொகுதியில் பெற்ற வாக்கு விவரங்களைப் பார்க்கலாம்.
2021 சட்டசபை தேர்தல்:
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11,629 வாக்குகள் பெற்றார்.
வாக்கு சதவீதம்: 6.98%
2023 இடைத்தேர்தல்:
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகள் பெற்றார்.
வாக்கு சதவீதம்: 6.35%
இதன் மூலம், 2021 சட்டசபை தேர்தலை விட, 2023 இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்திருப்பதை காணலாம்.
இந்த தரவுகளின் அடிப்படையில், 2025 தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு எந்த அளவிற்கு வாக்குகள் கிடைக்கும் என்பதற்கான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், ஈரோட்டில் நாம் தமிழர் கட்சிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறதா அல்லது அந்தக் கட்சி வாக்கு சதவீதத்தை உயர்த்துகிறதா என்பதை பொறுத்திருந்து காணலாம்.

ஈரோடு மாவட்டம்
“பெரியார் மண்ணில் நாம் தமிழர் கட்சிக்கு ஆபத்து? ஈரோடு இடைத்தேர்தல் முடிவுக்கு முன் பரபரப்பு!”
“பெரியார் மண்ணில் நாம் தமிழர் கட்சிக்கு ஆபத்து? ஈரோடு இடைத்தேர்தல் முடிவுக்கு முன் பரபரப்பு!”
- February 8, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this