இந்தியா

“ஊழல் ஆட்சி அழிவின் ஆரம்பம் – கெஜ்ரிவால் பின்னடைவு, திமுகவுக்கு எச்சரிக்கை!”

அயோத்தியில் அமைந்துள்ள மில்கிபூர் சட்டமன்ற தொகுதியில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, மில்கிபூர் தொகுதியை கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றியால், மில்கிபூர் தொகுதி பாஜகவின் கோட்டையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வெற்றியை பாஜகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மில்கிபூர் சட்டமன்ற தொகுதி, 1967 முதல் நடைபெறும் தேர்தல்களில் அதிகமாக சமாஜ்வாதி கட்சியே வெற்றி பெற்றுள்ளது. இதனால், இது சமாஜ்வாதியின் கோட்டையாக கருதப்பட்டது. ஆனால், 2017 சட்டமன்ற தேர்தலில் பாஜக முதன்முறையாக வெற்றி பெற்றது. அதன் பிறகு, 2022 சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி மீண்டும் தொகுதியை கைப்பற்றி, தனது ஆதிக்கத்தை நிறுவியது.

2022 தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக இருந்த அவதேஷ் பிரசாத், 103,905 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பின்னர், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பைசாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மில்கிபூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த முறை, பாஜகவின் சார்பில் சந்திரபானு பஸ்வான் போட்டியிட்டார். சமாஜ்வாதியின் சார்பில் அஜித் பிரசாத் களமிறங்கினார். இரண்டு கட்சிகளும் இந்த தொகுதியில் வெற்றி பெற கடுமையாக உழைத்தன.

பாஜகவிற்கு இது முக்கியமான தொகுதி. ஏனெனில், அயோத்தி கோயில் அமைந்துள்ள தொகுதி என்பதால், இந்த இடத்தில் வெற்றி பெறுவது கட்சியின் கௌரவ பிரச்சனையாக மாறியது. இதை மனதில் கொண்டு, கட்சி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டது.

மறுபுறம், சமாஜ்வாதி கட்சி இதுவரை அதிக முறை வெற்றி பெற்ற தொகுதி என்பதால், தனது ஆதிக்கத்தை இழக்க விரும்பவில்லை. மேலும், தற்போதைய சிட்டிங் எம்எல்ஏ அதே கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், தொகுதியில் தோல்வி கண்டால், கட்சியின் தொண்டர்களிடம் நம்பிக்கையின்மை உருவாகும் என்ற கவலையில் கட்சி இருந்தது. எனவே, வெற்றிக்காக கட்சி கடுமையாக உழைத்தது.

வாக்கு எண்ணிக்கையில் பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி 24 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், பாஜகவின் சந்திரபானு பஸ்வான் 55,798 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். சமாஜ்வாதி வேட்பாளர் அஜித் பிரசாத் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாஜகவின் சந்திரபானு பஸ்வான் 1,46,397 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் இவரை விட 61,710 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் பாஜக, மில்கிபூர் தொகுதியை மீண்டும் கைப்பற்றி, அயோத்தியில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image