உலகம்

“காங்கோ சிறையில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்: 6,000 கைதிகள் தப்பி ஓடினர்!”

காங்கோ ஜனநாயக குடியரசின் முன்செஸ்க் நகரில், கிளர்ச்சியாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடைபெற்ற மோதலின் போது, சிறையிலிருந்த 6,000 கைதிகள் தப்பி ஓடினர். கிழக்கு ஆப்பிரிக்கா நாடான காங்கோவில், எம்-23 என்கிற கிளர்ச்சி குழு பொதுமக்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. காங்கோ அரசு அவற்றை கட்டுப்படுத்த கடுமையாக போராடி வருகிறது.

கடந்த வாரம், கோமா நகரில் ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் அங்கு சரமாரி தாக்குதல்கள் நடத்தியதில் ஐ.நா அமைதிப்படை வீரர்களும் சேர்த்து 13 பேர் பலியாகினர். இச்சூழலில், கிளர்ச்சியாளர்கள் முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலையையும் தாக்கினர். இதில் சிறை காவலர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனையடுத்து, கைதிகள் தப்பி ஓடியதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 6,000 கைதிகள் தப்பி ஓடியதாக கூறப்படுவதால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Exit mobile version