கோவையில் இன்று காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, மும்பையிலிருந்து கோவைக்கு வந்த ஏர் இந்தியா விமானம், திடீர் பனி மூட்டத்தால் தரையிறங்க முடியாமல் சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்தது. பின்னர் பனி குறைந்தபோது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
அதேபோல், தில்லியில் இருந்து கோவைக்கு வந்த இண்டிகோ விமானமும் கடும் பனி காரணமாக கோவையில் தரையிறங்க முடியவில்லை. இதனால், விமானத்தை கொச்சின் விமான நிலையத்திற்கு திருப்பி விட அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதேபோல், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக அங்கும் விமான மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விரைவு ரயில்களும் பெரும் தாமதத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிகாரிகள், நிலைமையை சரிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம்
“கோவை வானத்தில் பரபரப்பு – அரை மணி நேரம் வட்டமிட்ட விமானம்!”
“கோவை வானத்தில் பரபரப்பு – அரை மணி நேரம் வட்டமிட்ட விமானம்!”
- February 7, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this