தமிழகம்

“சாதி வாரி கணக்கெடுப்பு: ஆட்சியாளர்களின் பொய் வேடம் விரைவில் கலையும்! – விஜய் கடும் விமர்சனம்”

பெரியாரே எங்கள் தலைவர், தலைவர்களுக்கு எல்லாம் தலைவர்’ என்று சூழலுக்கு ஏற்றவாறு தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே அவரைப் பற்றிப் பெருமை பேசும் தற்போதைய ஆட்சியாளர்கள், சமூக நீதியைக் காக்கும் செயல்பாடான சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தையே முன்வைத்து வருகின்றனர் என்று தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் விஜய் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், பெரியார் எங்கள் தலைவர் என்போர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என்று சொல்கிறார்கள் என்றும் விமர்சித்துள்ளார். மேலும், “ஆட்சியாளர்களின் சமூக நீதி வேடம் விரைவில் கலைந்து விடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் கூறியிருப்பதாவது:

“இதே அதிகாரமற்ற நிலைதானா தெலுங்கானா மாநில அரசுக்கும்?”
அங்கு சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூட்டி, சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து, விவாதம் நடத்த முடிகிறது. பிற மாநிலங்கள் போல் தமிழக அரசு சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வை கூட நடத்தவில்லை. ஏன்?

இது போன்ற ஏராளமான கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள், அவற்றை அலட்சியப் போக்குடன் கடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நேரத்தில், ஒன்றை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதில் ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன என்பதை மக்கள் நன்கு அறிவர்.

எல்லோருக்கும் சம உரிமை வழங்குவதற்கான ஒரே வழி – சமூக நீதி, சமத்துவ நீதி, சாதிவாரிக் கணக்கெடுப்பு. ஆனால், அதற்கான ஆய்வை கூட மேற்கொள்ளாத தமிழக அரசு, இனியும் தாமதித்தால், தற்போதைய ஆட்சியாளர்களின் பொய்வேடம் விரைவில் கலைந்து விடும்.

இவ்வாறு தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image