புதுடெல்லியில் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதற்குமுன், பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து, இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து பேசினார். ஏழைகளுக்கான நலத்திட்டங்கள், மகளிர் முன்னேற்றம், வருமான வரி மாற்றங்கள் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி தொடர்பாக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
பிரதமர் மோடி தனது உரையில், இந்த ஆண்டின் பட்ஜெட், வளர்ந்த பாரதத்திற்கான அடிப்படையான அம்சமாக இருக்கும். 2047 ஆம் ஆண்டில் ஒரு முன்னேறிய இந்தியாவை உருவாக்குவதே இலக்கு. இது மகளிர் முன்னேற்றத்திற்கும், ஏழைகளுக்கான நலத்திட்டங்களுக்கும் வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.
பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களில், வருமான வரி மாற்றம் முக்கிய அம்சமாக உள்ளது. பழைய வரி முறையை ஒழிக்க அரசு திட்டமிட்டு இருக்கலாம். 2.5 லட்சம் வருமானத்திற்கு வரி இல்லை, 2.5 – 5 லட்சம் வருமானத்திற்கு 5%, 5 – 10 லட்சம் வருமானத்திற்கு 20%, 10 லட்சத்திற்கு மேல் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும். புதிய வரி முறையில் 10 லட்சம் வருமானத்திற்கு வரிவிலக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
உள்கட்டமைப்பு மற்றும் விவசாய வளர்ச்சிக்காக பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் அறிவிக்கப்படலாம். விவசாயத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம். மகளிர் மற்றும் ஏழைகள் நலத்திட்டங்களுக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படும். மகளிரின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.
கடந்த ஆண்டு, வருமான வரி மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த ஆண்டு நடுத்தர வர்க்கத்திற்கு வரி விலக்கு அளிக்க வாய்ப்பு உள்ளது. வரி கட்டுப்பாட்டால் பொதுமக்களுக்கு நன்மை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ச்சிக்காக அனைத்து எம்.பிக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பட்ஜெட் கூட்டத்தொடர் வெற்றிகரமாக நடைபெற மகாலட்சுமியை வழிபடுகிறேன் என்றும் கூறினார். “சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்” – இந்த மூன்று நோக்கங்களுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்படும் என உறுதியளித்தார்.
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் மக்களுக்கு நம்பிக்கையளிக்குமா? வருமான வரி மாற்றங்கள் பொதுமக்களுக்கு எவ்வளவு நன்மை பயக்கும்? என்பதற்கான பதில் நாளைய பட்ஜெட் உரையில் வெளிவரும்.


Related Post

Leave feedback about this