அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் இதுகுறித்து வெளியிட்ட தகவலில், 1957 ஆம் ஆண்டிலேயே பவானி ஆற்றின் உபரி நீரை திருப்பி விடவேண்டும் என கோவை மாவட்ட விவசாயிகள் மனு அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் தமிழக முதல்வராக காமராஜர் இருந்தார்.
1972 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கு “அத்திக்கடவு – அவிநாசி திட்டம்” என பெயரிடப்பட்டு, திட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் தமிழக முதல்வராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி.
2009 ஆம் ஆண்டில் திட்டத்திற்கான தொழில்நுட்ப நிபுணர் குழு அமைக்கப்பட்டு, திட்டத்தின் வரையறை செய்யப்பட்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்தது கலைஞர் கருணாநிதி.
2019 ஆம் ஆண்டில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1,634 கோடி ரூபாய் செலவில் 34 மாதங்களுக்குள் திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், போதிய நிதி ஒதுக்கப்படாமலும், நிலம் கையகப்படுத்தப்படாமலும் இருந்ததால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அந்த நேரத்தில் தமிழக முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி.
2021 முதல் 2024 வரை தி.மு.க. ஆட்சியில், திட்டத்திற்கு தேவையான முழுமையான நிதியான 1,960 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. திட்டத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டது. மேலும், திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. அந்த நேரத்தில் தமிழக முதல்வராக இருந்தவர் மு.க.ஸ்டாலின்.
2025 ஆம் ஆண்டில் மக்கள் இந்த திட்டத்திலிருந்து நீர் பெற்றுள்ளனர். அதே தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தார்.
முன்னதாக, கோவை அன்னூர் அருகே அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினரால் நேற்று நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்ட போது, மத்திய அரசு அல்லது வங்கிகளிடமிருந்து நிதி பெற்று திட்டத்தை செயல்படுத்தலாம் என்று கூறினர். அதனால், திட்டம் எப்போது முடியும் என்பதை கணிக்க முடியவில்லை. எனவே, மாநில அரசின் நிதியில் இதை செயல்படுத்த உத்தரவிட்டேன். பணிகள் வேகமாக நிறைவு செய்ய ஒப்பந்தம் எல்.என்.டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, கொரோனா தாக்கத்தால் வேலைகள் தற்காலிகமாக தடைபட்டன. அதற்குப் பிறகு, சுமார் 85% பணிகள் முடிவடைந்து, 15% பணிகள் மட்டும் மீதமிருந்தன. நிலம் கையகப்படுத்துவதில் இருந்த சிரமங்களால் திட்டம் மேலும் தாமதமானது.
இந்த நிலைமைக்குப் பிறகு, அடுத்ததாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்பதால் இதை திட்டமிட்டு தாமதப்படுத்தியது. நான்கு வருடங்களாக திட்டத்தை திறக்காமல் காலம் கடத்தி, தற்போது அதை திறந்து வைத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம்
“அத்திக்கடவு – அவிநாசி திட்டம்: யார் உண்மையில் செயல்படுத்தியது? எடப்பாடி பழனிசாமி Vs மு.க. ஸ்டாலின் – உண்மை என்ன?”
“அத்திக்கடவு – அவிநாசி திட்டம்: யார் உண்மையில் செயல்படுத்தியது? எடப்பாடி பழனிசாமி Vs மு.க. ஸ்டாலின் – உண்மை என்ன?”
- February 10, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this