உலகின் தென் துருவப் பிரதேசமான அண்டார்டிகா, பனிக்கட்டிகளால் சூழப்பட்ட ஒரு வெண்மையான உலகம். இதில் மனிதர்கள் இயல்பாக வாழ முடியாது. ஆனால், இதன் அதிசயங்களில் ஒன்று “ரத்த நீர்வீழ்ச்சி”, பனிக்கட்டிகளுக்கிடையே சிவப்பு நிறத்தில் கொட்டும் நீர்வீழ்ச்சி ஆகும்.
1911ஆம் ஆண்டில் புவியியலாளர் தாமஸ் கிரிஃபித் டெய்லர் இந்த நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தார். டெய்லர் பனிப்பாறையின் கீழே, மேற்கு ஏரி போனி பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி காணப்படுகிறது. வெண்மையான பனிக்கட்டிகளுக்கிடையே சிவப்பு நீர் பாய்வதால், இது உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆரம்ப காலங்களில், இந்த நீர்வீழ்ச்சியின் சிவப்பு நிறம் பாசிகளால் ஏற்பட்டதாக கருதப்பட்டது. ஆனால், சமீபத்திய ஆய்வுகள் உண்மையான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளன. பனிப்பாறையில் அடைக்கப்பட்டிருந்த நீருடன் இரும்பு கலந்துள்ளது. இந்த நீர் வெளியேறும்போது ஆக்சிஜனுடன் சேர்ந்து இரும்பு ஆக்ஸைடை உருவாக்குகிறது. இதுவே ரத்தத்தை போன்ற சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது.
மற்ற இடங்களில் 0°C வெப்பத்திலேயே தண்ணீர் உறைவதை பார்க்கலாம். ஆனால், இந்த நீர் -19°C வெப்பத்திலும் உறையாமல் பாய்கிறது! நீரின் உப்புப் பொருளின் அளவு மிக அதிகம் (கடல் நீரைவிட இரு மடங்கு அதிகம்) என்பதால், பனிக்கட்டியாக மாறாமல் நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது.
15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் கடல் இருந்தது. பின்னர் இயற்கை மாற்றங்களால் ஏரி உருவாகி, அதன் நீர் பனிப்பாறைகளால் மூடப்பட்டுவிட்டது. பல ஆயிரம் ஆண்டுகளாக அந்த நீர் அடைக்கப்பட்ட நிலையில் இருந்துவிட்டு, தற்போது வெளியேறி ரத்த நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது.
இன்றும், அண்டார்டிகாவின் ரத்த நீர்வீழ்ச்சி விஞ்ஞான உலகுக்கே புதிராக உள்ளது. இந்த நீரின் தன்மைகள் மற்றும் அதில் இருக்கும் உயிரி வளங்கள் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தகைய இயற்கை அதிசயங்கள், பூமியின் வரலாற்றை புரிந்துகொள்ளும் முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன!

உலகம்
“அண்டார்டிகாவின் ரத்த நீர்வீழ்ச்சி: உலகிற்கு ஆச்சரியத்தை தந்த இயற்கை அதிசயம்!”
“அண்டார்டிகாவின் ரத்த நீர்வீழ்ச்சி: உலகிற்கு ஆச்சரியத்தை தந்த இயற்கை அதிசயம்!”
- January 30, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this