இந்தியா

“ஆந்திராவில் பெண்களுக்கு வீட்டு வேலை திட்டம் – சந்திரபாபு நாயுடுவின் புதிய முடிவு!”

ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, பெண்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளார். பெண்களின் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை மேம்படுத்த, மேலும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த புதிய “வீட்டிலிருந்து வேலை” (Work from Home) கொள்கை, தகவல் தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும். இதன் மூலம், பெண்கள் தங்கள் சொந்த ஊரில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு பெறுவார்கள்.

இந்த திட்டம் தொடர்பாக, சந்திரபாபு நாயுடு தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில்,

“இன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கான சர்வதேச தினம். இந்த துறைகளில் பெண்களின் சாதனைகளை பாராட்டுகிறேன். அவர்களுக்கு சமமான வேலை வாய்ப்புகள் வழங்க ஆந்திர அரசு உறுதியுடன் செயல்படும். “வீட்டிலிருந்து வேலை” (Work from Home) மற்றும் “ஹைபிரிட் வேலை முறை” (Hybrid Work Model) போன்ற மாற்றங்கள், பெண்கள் தொழிலாளர்களின் பங்களிப்பை பெரிதும் அதிகரிக்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெண்கள் தங்கள் சொந்த ஊரில் இருந்து வேலை செய்யும் வகையில், ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்திலும் COWORKING SPACE எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐ.டி. அலுவலகங்களை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஊக்குவிப்புகள் வழங்கி, கிராமப்புறங்களில் கூட வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு முயற்சி எடுக்கவுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம், மகளிர் சுயநிறைவை வலுப்படுத்துவதோடு, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கும் என அரசியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image