ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என கூறியதற்காக அந்நாட்டின் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் மீது தாலிபான் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து, அவர் மீது பயணத் தடையும் விதித்துள்ளது. இதனால், அவர் உயிருக்கு பயந்து ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2021 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தனர். இஸ்லாமிய சட்டங்களை மிக கடுமையாக கடைப்பிடிக்கும் தாலிபான் அரசு, பெண்களுக்கு வேலை மற்றும் கல்வியில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, பெண்களுக்கு 6ஆம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டது. மேலும், தனியார் தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற முடியாது, ஹோட்டல்களில் ஆண்-பெண் சேர்ந்து அமரக் கூடாது, வீட்டை விட்டு வெளியே வரும்போது புர்கா அணிய வேண்டும், ஜிம் மற்றும் பூங்காக்களுக்கு செல்ல கூடாது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளை பல்வேறு நாடுகள் கண்டித்தாலும், தாலிபான் அரசு அதை உதாசீனப்படுத்தியது.
இந்த நிலையில், கடந்த மாதம் 20ஆம் தேதி ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கோஸ்ட் மாகாணத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய், பெண்களின் கல்வி உரிமையை மறுப்பது ஒரு பெரிய அநீதியாகும் என கூறினார். மேலும், நபிகள் நாயகம் காலத்தில் கல்விக்கான வாய்ப்புகள் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் வழங்கப்பட்டிருந்தது எனவும் அவர் கூறினார்.
இவர் கூறிய இந்த கருத்துகள் ஆப்கானிஸ்தானில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், தாலிபான் அரசாங்கம் அவரது மீது கடும் கோபம் கொண்டு, அவரை கைது செய்ய உத்தரவிட்டது. மேலும், அவர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடியாதவாறு பயணத்தடையும் விதிக்கப்பட்டதாக தி கார்டியன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று உணர்ந்த அமைச்சர் ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

உலகம்
பெண்கள் கல்விக்கு ஆதரவாக பேசியதற்காக தாலிபான் அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு – உயிர் பிழிந்து வெளிநாட்டிற்கு தப்பிய அதிர்ச்சி சம்பவம்!
பெண்கள் கல்விக்கு ஆதரவாக பேசியதற்காக தாலிபான் அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு – உயிர் பிழிந்து வெளிநாட்டிற்கு தப்பிய அதிர்ச்சி சம்பவம்!
- February 5, 2025
- 0 Comments

Related Post

Leave feedback about this