மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதி மரணம்
மதுரை, கீழப்புதூர், மாயாண்டி தேவர் தெருவை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக 2023 ஆகஸ்ட் மாதம் முதல் மதுரை மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்
பிற்பகல் 3.30 மணி அளவில் பழனிச்சாமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பழனிச்சாமி மரணம் அடைந்தார்
இதனை அடுத்து பழனிச்சாமியின் உடல் குறைவு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது
Leave feedback about this