கபில் தேவ் ஒரு சகாப்தம்;
வேகப்பந்து வீச்சில் தனது திறமையை மட்டுமின்றி கிரிக்கெட் உலகையும் அலங்கரித்து ஆல்ரவுண்ட் திறமைகளையும் வெளிப்படுத்தி 400 டெஸ்ட் விக்கெட்டுகளை குவித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றவர். ஜனவரி 6 1959இல் பிறந்த இந்த கபில்தேவ் கிரிக்கெட் நிலப்பரப்பில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர். இன்று 64 வயதை எட்டியுள்ளார்.
அவர் தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பையை வென்று ஒரு மிகப்பெரிய சகாப்தத்தை தொடங்கி வைத்தார் .இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மைல்கல் .
இவர் வேகப்பந்து வீச்சில் மட்டுமல்லாமல் ஆல்ரவுண்டர் திறமைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ஆக்ரோஷமான பேட்டிங் ஸ்டைல் ஒரு அழியாத முத்திரையை இவருக்கு விட்டு சென்றுள்ளது. ஜிம்பா பேவுக்கு எதிராக 1983 ஆம் ஆண்டு அன்று அவர் எடுத்த 175 ரன்கள் வரலாற்று சிறப்புமிக்க வகையில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இவர் தலைமையில் வழிகாட்டும் பண்பு தலைமுறை தலைமுறைகளுக்கும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி கிரிக்கெட் வரலாற்றில் முத்திரை பதிப்பாக அமைந்தது. ஓய்வுக்குப் பிறகும் கபில்தேவ் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் வர்ணனை, வழிகாட்டுதல் முதலியவற்றில் முக்கிய பங்கு வகித்தார். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே கபில்தேவ் அவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடும் வேளையில் the paper boy செய்திகள் அவருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
Leave feedback about this