பரந்தூர் விமான நிலையம் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்
பரந்தூர் விமான நிலையம் பணிகள் தமிழ்நாடு சார்பில் முழுமையாக முடிவடைந்துள்ளதையடுத்து, மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது. “மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், தரமான பணிகள் நடைபெற்று வருகின்றன, இது விரைவில் துவங்கும்,” என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
சிப்காட் மரக்கன்று நடும் திட்டம்
தமிழ்நாடு சிப்காட் (SIPCOT) நிறுவனத்தின் முன்னெடுப்பாக, 23 மாவட்டங்களில் உள்ள 42 தொழில்துறை பூங்காக்களில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரே நாளில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா. இந்த திட்டம் மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் துவக்கி வைக்கப்பட்டது.
மரக்கன்று நடும் விழா
மரக்கன்று நடும் விழாவில், “சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தொழிற்பூங்காக்களை உருவாக்குவது சிப்காட் நிறுவனத்தின் முக்கிய இலக்காகும். 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் முயற்சிக்கு இது பெரும் பங்களிப்பாக அமையும்,” என டி.ஆர்.பி. ராஜா பேசினார்.
பனை விதைகள்
ஏற்கனவே 50,000 பனைமரக்கன்றுகள் ஓசூர், பர்கூர், குருபரப்பள்ளி பகுதிகளில் நடப்பட்டுள்ளன. மேலும், 1 லட்சம் பனை விதைகள் தொழிற்பூங்காக்களில் நடப்படும் வேலைகள் துவங்கியுள்ளன.
விழாவில் பங்கேற்றவர்கள்
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், சிப்காட் மேலாளர் செந்தில் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Leave feedback about this