சேலம் மாவட்டம்

தீக்குளிக்க முயன்ற கூலி தொழிலாளி – செய்தியாளர் சாமர்த்தியத்தால் உயிர் தப்பினார்

சேலம்: சொத்து ஆவணங்களை தர மறுக்கும் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கூலி தொழிலாளி முனுசாமி, தீக்குளிக்க முயன்ற பரபரப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீக்குளிக்க முனைந்த முன்னுசாமியை, அங்கிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் தடுக்க, அவரது கையில் இருந்த தீப்பெட்டியை கைப்பற்றி பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, போலீசார் துரிதமாக நேரில் வந்து முனுசாமி மீது தண்ணீரை ஊற்றி அவரை பாதுகாப்பாக கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image