திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ஆய்வை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா. மூர்த்தி இ.கா.ப அவர்கள் மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட குற்றப்பிரிவு, குற்ற ஆவண காப்பகம், மாவட்ட காவல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் பணிகள் பரிசீலிக்கப்பட்டன. துறைசார்ந்த ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்த முனைவர் பா. மூர்த்தி, அவற்றின் பராமரிப்பு முறைகள் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும், மாவட்ட குற்றப்பிரிவில் நிலுவையிலுள்ள வழக்குகளை வேகமாக விசாரிக்க உத்தரவிட்டதுடன், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.
இந்த ஆய்வில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன் மற்றும் முக்கிய காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். ஆய்வின் மூலம் காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், மக்கள் நம்பிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Leave feedback about this