கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில், 6 மாத கர்ப்பிணி மனைவி கல்பனா (42) மற்றும் 6 வயது மகள் சாரதி பாலாவை கொலை செய்துவிட்டு, செல்வகணேஷ் (45) பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். வெங்கமேடு காவல் நிலைய போலீசார், மயக்க நிலையில் இருந்த செல்வகணேஷை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கல்பனா மற்றும் சாரதி பாலாவின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave feedback about this