திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில், கொடைக்கானல் மலைப்பகுதிக்கு செல்வதற்கான இ-பாஸ் நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரிகளை அமல்படுத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 5 லிட்டருக்கு குறைவான தடை செய்யப்பட்ட நெகிழிப் பாட்டில்களை பயன்படுத்தும் தனிநபர்கள், வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு பசுமை வரி விதிக்கும் திட்டம் பற்றி கலந்துரையாடப்பட்டது.
கொடைக்கானல் செல்ல பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே சமயத்தில் திண்டுக்கல்லின் சிறுமலை மலைப்பகுதியில் அனுமதியின்றி ஹிட்டாச்சி கனரக வாகனங்கள் எவ்வாறு செல்கின்றன என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இ-பாஸ் கட்டுப்பாடுகள் மக்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதி இன்றி மலைப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்லும் விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் வனத்துறையினர் எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதையும் அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
மொத்தத்தில், கட்டுப்பாடுகள் ஒருபுறம் கடுமையாக இருந்தபோதும், மற்றொரு புறம் அவற்றை மீறி நிகழும் செயல்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்வலை ஏற்படுத்தி உள்ளது.
Leave feedback about this