127 நாட்களுக்குப் பிறகு ஆதித்யா எல் ஒன் தன் இலக்கை அடைந்தது.நரேந்திர மோடி பெருமிதம்.
இது பற்றி X தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் இந்தியா இன்னொரு அடையாளத்தை உருவாக்குவதாகவும், இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு மையமான ஆதித்யா எல் ஒன் அதன் இலக்கை அடைந்ததாகவும், நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுவதாகவும் மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளை தொடர்வோம் எனவும் அவர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Leave feedback about this