பிரபல நடிகரின் கைது; திடீர் சர்ச்சை!
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் கைது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அல்லு அர்ஜுன் இடையேயான முன்விரோதம் காரணமாக அரங்கேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புகார் மற்றும் வழக்கு
அல்லு அர்ஜுன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க சென்ற ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இதற்கு காரணம் அல்லு அர்ஜூன் முன்னறிவிப்பின்றி அதே திரையரங்கிற்கு படம் பார்க்க வந்ததாகவும் அதனால் ரசிகர்கள் கூட்டம் நிரம்பியதால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்து புகார் வரை சென்றது. இந்த புகாரின் அடிப்படையில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். ஓரிரவு அவர் சிறையில் கழித்த பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் அல்லு அர்ஜுனின் கைது பல்வேறு தரப்பினரின் கண்டனங்களை பெற்று வருவதோடு, அப்பகுதியில் போராட்டங்களையும் வெடிக்க செய்த்து.
ரேவந்த் ரெட்டியின் விமர்சனம்
இந்த சம்பவம் தொடர்பாக, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி”ஒரு பெண் உயிரிழந்ததை நாம் கவனிக்காமல், நடிகர் பற்றி மட்டும் பேசுவது தவறு. அந்த பெண்ணின் குழந்தை 11 நாட்களாக கோமாவில் இருக்கிறது. அவன் மீண்டு வந்து அம்மா எங்கே என்று கேட்டால் அம்மா இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? இது குறித்தெல்லாம் நீங்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை.
இவர் மேலும், “அல்லு அர்ஜுன் சினிமா மூலம் பணம் சம்பாதிக்கின்றார் அவர் என்ன நாட்டுக்காக பார்டரில் நின்று சண்டை போட்டாரா படம் தயாரிக்கிறார் பணம் சம்பாதிக்கிறார் அவ்வளவுதான் என ரேவந்த் ரெட்டி. தெரிவித்துள்ளார்.
சர்ச்சை மற்றும் சமூக எதிர்ப்புகள்
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பல்வேறு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகிறது
தொடரும் போராட்டங்கள்
இதனால் தெலங்கானா மற்றும் நாகரிகப்பொது இடங்களில் போராட்டங்கள் உருவாகியுள்ளன. ரேவந்த் ரெட்டியின் கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை உண்டாக்கி, தற்போது பல்வேறு மக்கள் இதை எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
Leave feedback about this